சேவைகள்
மாதந்தோறும் வரும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் ஹோமம் வளர்த்து யாகங்களும் சிறப்பு பூசைகளும் நடைபெறுகின்றன. பூசைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
வசதிகள்
பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தேவதைகளுக்கு படைக்க கூடிய பொங்கல் மற்றும் பிரசாதங்களை தயார் செய்வதற்காக அடுப்புகளுடன் கூடிய சமையலறை இக்கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கள் குடும்ப விழாக்களை நிறைவேற்றுவதற்கும் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் வசதிகளுடன் கூடிய சமையலறையும் அமைக்கப்பட்டுள்ளது.