திருவிழாக்கள்

ஆடி மாத பூசைகள்
ஆடி மாதம் 18 ம் நாள் அன்றும் ஆடி மாதம் அமாவாசை நாளன்றும், பக்தர்கள் தங்களுடைய முன்னோர்களை நினைவில் வைத்து வணங்குவர். அன்று கட்ட புளியமரத்தில் தீர்த்த கலசத்தில் புனித நீர் நிரப்பி சிறப்பு பூசை நடைபெறும். உற்சவர் சிதம்பரத்தாண்டவருக்கு அபிசேகம் நடைபெறும். பக்தர்கள் திருவாசகம் பாடி சித்தநாதரை வணங்கி சரணடைவர்.